விமலுக்கு எதிரான வழக்கு 22ஆம் திகதி விசாரணைக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (01) அறிவித்துள்ளனர்.

சுமார் 75 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் எவ்வாறு சம்பாதித்ததாக தெரிவிக்க தவறியமைக்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவரது சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ​​பிரதிவாதி விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று முதல் ஏழு நாட்கள் விடுமுறை வழங்குமாறு மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, நீதிமன்றத்தை சந்தித்து, பிரதிவாதி செப்டம்பர் 13ஆம் திகதி முதல் சுகயீனமுற்றுள்ளதாகவும், நீதிமன்றுக்கு இவ்வாறு தொடர்ந்தும் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கினை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது என சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், விசாரணையை முடிப்பதற்கான திகதியை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

எனவே, வழக்கை மார்ச் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய போது, ​​75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்த விதத்தை வெளியிடத் தவறியதன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளது. (P)


Related Posts