தீபிகா படுகோனே வீட்டில் விரைவில் கேட்க போகுது குழந்தை சத்தம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர். இவருக்கு நிகர் இவரே! இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அது டாப் வசூல் வேட்டை நடத்துகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சினிமா துறையில் ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக இவருக்கும் ரசிகர்களும் வரவேற்பும் உண்டு. 2006ம் ஆண்டு கன்னடத்தில் ஐஸ்வர்யா படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் 2007ம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.கோச்சடையான் என்ற ஒரேஒரு தமிழ் படத்தில் நடித்தார் அது ஒரு அனிமேஷன் படம் தான். நேரடியாக தமிழில் எந்த படமும் இவர் நடிக்கவில்லை. கடைசியாக இவரது நடிப்பில் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. தீபிகா படுகோனேவிற்கு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்க தற்போது இன்று ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளனர். அதாவது நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் கர்ப்பமாக உள்ளார்களாம். சமீபத்தில் தான் இந்த குட் நியூஸை தீபிகா அறிவித்துள்ளார்.

Related Posts