7 ஆண்டுகளாக அறையில் அடைத்து... இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் போலீசார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அந்த அறையில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரருகே, துப்பாக்கி, போதை பொருட்கள் மற்றும் பல செல்போன்கள் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

7 ஆண்டுகளுக்கு முன், 2017-ம் ஆண்டில் அந்த இளம்பெண் காணாமல் போய் விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 30 வயது நெருங்கிய அவரை போலீசார் மீட்டுள்ளனர். அவருடைய குடும்பத்தினரும் தகவல் அறிந்து வந்து இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர்.

அந்த அறையில், அவர் அடைத்து வைக்கப்பட காரணம் என்ன? யாரேனும் அவரை கடத்தி சென்றனரா? அல்லது விருப்பத்தின் பேரில் அவர்களுடன் அவர் சென்றாரா? ஆகியவை பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Posts