பிரியாணி கடையை மறைத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து பேனர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணி எம்ஜிஆர் சிலைக்கு எதிரே அன்வர் பாஷா என்பவர்  பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் வைத்த பேனர்களானது நடைபாதை முழுவதும் ஆக்கிரமித்திருந்துள்ளது. இதில் அன்வர் பாஷாவின் பிரியாணி கடையை மறைக்கும் வகையில் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இதனால், பேனர் வைக்கும்போது திமுக நிர்வாகிகளை கடையில் இருந்த ஊழியர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பேனரை கட்டிக்கொண்டிருந்த திமுக நிர்வாகி ஒருவர், ஆவேசமாகி பிரியாணி கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந்த ஊழியரை ஓடிவந்து தாக்கியுள்ளார்.

Related Posts