இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்றைய தினம் நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி,புத்தளம் மற்றும் மட்டக்களப்பு   மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான  வானிலை நிலவக்கூடும்.

மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

அத்துடன், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படுவதோடு சீரான வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)



Related Posts