முதன்முறையாக கண்கலங்கி அழும் தொகுப்பாளினி பிரியங்கா! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் நீங்க முடியாத இடத்தில் உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா, தனது சோகமான மறுபக்கம் குறித்து பேசியுள்ளார். இதில், தனது தம்பியின் மகள் தான் தன்னுடைய உலகம் என்றும். தங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியதே அவள் தான் என்றும் கூறி கண்கலங்கினார். அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன், அத்தை எனும் உறவை தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன் என கூறினார் பிரியங்கா. இதன்பின் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா, நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் நிச்சயம் வருவார், நீ நிறைய குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும். உன் மகன், உன் மகளை நான் பார்க்க வேண்டும் என அர்ச்சனா சொன்னவுடன், கண்கலங்கி அழுதார் பிரியங்கா. அன்புக்காக ஏங்கிய பிரியங்காவிடம் அர்ச்சனா, பேசிய இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலகலப்பான தொகுப்பாளினி பின்னாடி இவ்வளவு பெரிய சோகம் உள்ளதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts