மேலாடை கிழிந்தது, கூட்டத்தில் துணியை வீசி உதவிய நபர்! -ஷகிலா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகீலா. பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து பலரின் அன்பிற்கு ஆளானார். புகழ், குரேஷி உள்ளிட்ட பலரும் ஷகீலாவை மம்மி மம்மி என்று அழைத்து, ரசிகர்களும் ஷகீலாவை , மம்மி என அழைக்க துவங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷகீலாவுடைய அடையாளமே மாறி போனது என்றால் அது நூறு சதவீதம் உண்மையே! இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஷகீலா பேட்டி ஒன்றில் கூறியது, நடிகை சில்க் ஸ்மிதா நடித்த படத்தில்தான் நானும் சினிமாவில் அறிமுகமானேன். அப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். எனக்கு நீச்சல் சுத்தமாக தெரியாது. எனக்கு பின்னாடி என்தங்கையும் குதித்தார் ஏனெனில் அந்த படத்தில் தங்கையும் நடித்தார். அவர் என் மேல் குதிக்கும் போது என் ஆடை கிழிந்துவிட்டது. 

நான் தண்ணீருக்கு மேலே வரும்போது, என்னிடம் மேலாடை இல்லை. காரணம் என் தங்கை என்மேல் குதித்ததால் தண்ணீரில் மூழ்கிவிட்டேன். வெளியே வர முயற்சி செய்யும்போது முடியாமல் போனது. அப்போது ஒருவர் தண்ணீரில் மூழ்கிய என்னை காப்பாற்றினார். அப்போது தான் மேலாடை கிழிந்தது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டு இருந்தது. அதனால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் 300 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே என்னை பார்த்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது அப்போது திடீரென யாரோ ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து துணியை தூக்கி வீசினார். அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என கூறினார் நடிகை ஷகீலா.

Related Posts