காட்டுப்பகுதியில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சகரன்பூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு தாயுடன் வந்திருக்கிறார் . இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியே விளையாட சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடி இருக்கின்றனர். இந்நிலையில் சிறுமி இன்று காலை அந்த ஊரின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் நிர்வாணம் ஆக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அருகில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் போலீசார்.

Related Posts