விருது வாங்கிய அட்லீ! ஷாருக்கான் காலில் விழுந்தது ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜவான் என்ற மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்ததால் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார். என்னதான் அவரது கதை தனித்துவம் இல்லாமல் எங்கேயோ சுட்டது போல இருந்தாலும் கூட மக்கள் ரசிக்கிறார்கள் கொண்டாடுகிறார்கள். இவரும் அடுத்தடுத்து முன்னேறுகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல டாப் ஹீரோக்கள் வெயிட்டிங்கில் உள்ளார்கள். அட்லீ அடுத்து தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை இயக்க போகிறார். அதற்கு சம்பளமாக அவர் 60 கோடி ரூபாய் வாங்குகிறார் எனவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வளர்ந்துள்ளார். அம்பானி வீட்டு விஷேசத்திலே கலந்து கொள்கிறார் என்றால் அவரது வளர்ச்சியை யுகித்து கொள்ளுங்கள். 

நேற்று நடந்த ஜீ சினி விருதுகள் விழாவில் அட்லீ அவரது மனைவி உடன் கலந்துகொண்டார். மேலும் ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டதும் அட்லீ எழுந்து ஷாருக் கானின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றுவிட்டு அதன் பின் மேடை ஏறி இருக்கிறார். இந்த செயலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அட்லீ இயக்கிய படம் வெற்றி படமாகியதால் அட்லீயை கொண்டாடுகிறார்கள் அதுவே தோல்வி என்றால் மீண்டும் பாலிவுட் பக்கம் விடுவார்களா?

Related Posts