விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 924 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1017 சந்தேக நபர்கள் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஹெராயின் 395 கிராம் 306 மி.கி, பனி 184 கிராம் 667 மி.கி, கஞ்சா 20 கிலோ 29 கிராம், மாவா 1 கிலோ 219 கிராம், துலே 25 கிராம் 500 மி.கி, மதன மோதக 51 கிலோ 164 கிராம், , 144 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 924 சந்தேக நபர்களில் 99 சந்தேகநபர்கள் விளக்கமறியலின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 04 சந்தேக நபர்களின் சொத்துக்கள் ஆராயப்பட்டு 21 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். (P)

Related Posts