வட்டுக்கோட்டை இளைஞன் கொலை! கடற்படை என்ன செய்தது? சிக்கியது சிசிடிவி காணொளி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளது.


இதில் கடற்படையினரிடம் தஞ்சமடைந்த தம்பதியினரை கடற்படையினர் காப்பாற்றத்தவறியமை இந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.


இந்தக் காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மரக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது, மேலும் அந்தக் காரை சோதனை செய்த தடயவியல் துறையினர் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றர்

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(P)

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகள்





Related Posts