கார் திருட்டு தொடர்பில் சர்ச்சையான ரொரன்றோ போலீஸ் அறிவுரை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கார் திருடர்கள் திருடவரும்போது அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டு விடுங்கள் என ரொறன்ரோ பொலிசார் ஆலோசனை கூறியுள்ளார்கள்.

அவர்களுக்கு உங்கள் கார்தான் வேண்டும். ஆகவே, அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து கார் சாவியைத் திருட விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேறொன்றும் தேவையில்லை. 

ஆகவே, நீங்கள் கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டால் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்களைத் தாக்குவதிலிருந்து தப்பலாம் என பொலிசார் ஆலோசனை கூறியுள்ளார்கள். ஆனால், பொலிசாரின் இந்த வித்தியாசமான ஆலோசனையை சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக கேலி செய்துவருகிறார்கள்.

திருடர்கள் காரைத் திருடிச்செல்லட்டும், விடுங்கள் என்கிறார்களா என சிலர் கேள்வி எழுப்பினர். 

அதற்கு  பதிலளித்துள்ள பொலிசார், நல்ல நோக்கத்தில்தான் பொலிசாரில் ஒருவர் அவ்வாறு ஆலோசனை கூறினார் என்றனர். 

முட்டை விற்பனை தொடர்பில் எச்சரிக்கை! | Thedipaar News


Related Posts