ஒரே தோசையில் குட்டியாய் எட்டு கரப்பான் பூச்சிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டெல்லியின் பிரபல உணவகம் ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கான உணவில் எட்டு கரப்பன் பூச்சிகளை கண்டறிந்தது, இணையத்தில் வீடியோவாக பகிரப்பட்டதில் வைரலாகி உள்ளது.

கடந்த வாரம் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, தோழியுடன் உணவகம் சென்ற இஷானி என்ற பெண், தலா ஒரு தோசை ஆர்டர் செய்திருக்கிறார். ஆர்டரின் பிரகாரம் அவர்களுக்கு சுவையான பொடி தோசை பரிமாறப்பட்டது.

அந்த தோசையை விண்டு வாயிலிட்டு சுவைத்த இஷானி முகம் அஷ்டகோணலானது. சைவ உணவுப் பிரியரான இஷானி, தோசையில் சைவம் இல்லை என்பதை உடனே புரிந்துகொண்டார். 

உடனடியாக தோசையை பிரித்து ஆராய்ந்தார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒன்று இரண்டல்ல; எண்ணியதில் குட்டிக்குட்டியாய் எட்டு கரப்பான்பூச்சிகளை, ஒரே தோசையில் இஷானியும் அவரது தோழியும் அடையாளம் கண்டார்கள்.

உணவக ஊழியர்கள் தோசைகளை பறித்துச் சென்றதால் வீடியோவை முழுமையாக எடுக்க முடியவில்லை என்று குறைபட்ட இஷானிக்கு அதன் பின்னரும் கசப்பான அனுபவம் தொடர்ந்தது. உணவகத்தினரால் தான் மிரட்டப்பட்டதாகவும், பேரம் பேசப்பட்டதாகவும் பின்னர் தெரிவித்தார். தொடர்ந்து போலீஸார் முதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை பல தரப்பினரிடமும் இஷானி புகார் அளித்திருக்கிறார்.

Cooku with Comali புது நடுவர் இவர் தான் | Thedipaar News

Related Posts