ஆற்றில் பெட்ரோல் ஊற்றி, நெருப்பு வைத்து குதித்த இளைஞர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆற்றுப்பகுதிக்கு செல்லும் நான்கு வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பெட்ரோலை ஆற்றுக்குள் வட்டமாக ஊற்றுகின்றனர். 

பின்னர் அதில் தீக்குச்சியை கொளுத்தி போட, வட்ட வடிவில் தீப்பற்றி எரியத் துவங்குகிறது. அதே நேரத்தில் அருகில் உள்ள சுவற்றில் இருந்து இளைஞர் ஒருவர் எரியும் நெருப்பிற்குள் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட, அந்த இளைஞர், போர் வென்ற வீரனின் சந்தோஷத்துடன் தண்ணீரில் இருந்து வெளியேறி கரையேறுகிறார்.


இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ, மதுரை மாவட்டம் வைகை ஆற்றில் எடுக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், எப்போது பதிவாக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. இது போன்ற செயல்களால் நீர் நிலைகளும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதே போல் உரிய பாதுகாப்பின்றி இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 

பலருக்கும் இது மோசமான முன்னுதாரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை அறிந்து கொள்ளாமல், இந்த வீடியோவை வெளியிட்டுள்ள இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே போலீஸார் இந்த வீடியோவை பதிவிட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cooku with Comali புது நடுவர் இவர் தான் | Thedipaar News

Related Posts