அரைமணிநேர விளம்பரத்திற்கு ஐந்து கோடி வாங்கிய நயன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலையாள சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய டயானா என்ற நயன்தாரா தமிழில் ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வரும்போது, பேருந்தில் தான் வந்துள்ளார். ஆனால் இப்போது தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு வளர்த்துள்ளார். ஐயா படத்தை முடித்த கையோடு 2வது படமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2வது படமே ரஜினியிடன் நடிக்கிறார் என்றால் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பாருங்கள். அடுத்தடுத்து விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா, சிம்புவுடன் வல்லவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது கடின உழைப்பால் தமிழில் அசுர வளர்ச்சி கண்டார். 

வேகமாக சென்ற அவரது சினிமா பயணம் இடையில் சில கிசுகிசுவில் சிக்கியதால் அப்படியே காணாமல் போனார். பின் அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியவர் எந்த ஒரு இடைவேளையும் இல்லாமல் பிசியாக நடித்து வருகிறார்.அண்மையில் ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். ஜவான் படத்திற்கு முன் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றவர் இப்போது ரூ. 10 கோடி வரை சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். படங்களை தாண்டி நயன்தாரா நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார்..சமீபத்தில் ஒருமணிநேரம் இவர் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜுஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

விமர்சனத்துக்கு உள்ளான பிரபல நடிகையின் சமீபத்திய புகைப்படம்! | Thedipaar News

Related Posts