இந்த நடிகை வாழ்க்கையில் இவ்வளவு கொடுமைகளா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மெட்டி ஒலி தொடரில் கொடுமைக்கார மாமியாராக நடித்து மக்களிடம் பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இவரை மக்கள் அடையாளம் கண்டுகொண்டது மெட்டி ஒலி சீரியலில் தான். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார். தற்போது நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் சாந்தி வில்லியம்ஸ் தனது வாழ்க்கையில் சந்தித்த, தனது கணவரால் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். எனக்கு விருப்பம் இல்லாமல் மிரட்டி நடந்தது எனது திருமணம். திருமணம் முடிந்து 3 மாதம் கழித்து தான் என்னை பார்க்க வந்தார் என் கணவர்.எங்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 2 மகன்களும் பிறந்தார்கள்.

 முதல் குழந்தை பிறந்த நேரத்தில் வில்லியம்ஸ் முதல் மனைவி திரும்ப வந்தார், அவருடன் போக வில்லியம்ஸ் முயற்சி செய்தார். நானும் வில்லியம்ஸிடம் எனக்கு உங்க கூட வாழ பிடிக்கல, நீங்கள் அந்த பெண்ணோடு சென்றுவிடுங்கள் என்றேன். ஆனால் அது நடக்கவில்லை. யார் மேல கோபம் என்றாலும் வில்லியம்ஸ் என்னை வீட்டிற்கு வந்து அடிப்பார். கொடுமையாக இருக்கும். அவரிடம் வாங்காத அடியே இல்லை. படம் எடுக்கிறேன் என்று 100 கோடி சொத்தை இழந்தார். 500 சவரன் நகையை காலி செய்தார். பல சோகமான விஷயங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்டது என சாந்தி வில்லியம்ஸ் சோகமாக தெரிவித்திருக்கிறார். வில்லியாக நடித்த நடிகை பின்னணி இவ்வளவு வலிகள் நிறைந்ததா என மக்கள் வியப்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விமர்சனத்துக்கு உள்ளான பிரபல நடிகையின் சமீபத்திய புகைப்படம்! | Thedipaar News

Related Posts