21 இந்திய மீனவர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 14 ஆம் திகதி இரவும் இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

இலங்கை கடற்பரப்பினுள் 21 இந்திய மீனவர்கள் கைது! | Thedipaar News

Related Posts