பதவியை ராஜினாமா செய்த காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புதுச்சேரி, தெலங்கானா மாநிலத்துக்கும் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரமாக மக்கள் பணியாற்றவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு கட்சித் தலைமை தடை விதிக்கவில்லை எனவும் , எனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், வருங்கால திட்டம் குறித்து தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார். எனது விருப்பத்தின் பெயரில், மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Related Posts