கவர்ச்சி பாடலுக்கு ஆடிய போது உடலே நடுங்கிவிட்டது - சமந்தா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

 நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் சிகிச்சை, உடற்பயிற்சி என தன் உடல்நலத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டு கொண்டு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போதுதான் சிகிச்சை போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன. புஷ்பா படத்தில் வரும் ஊசொல்றியா பாடலில் மிகவும்கவர்ச்சியாக ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அந்த படத்தை சமந்தாவின் ஒரு பாடலுக்காகவே பலரும் தியேட்டர் சென்று பார்த்தார்கள். ராஸ்மிகா தான் படத்தில் ஹீரோயின் ஆனால் அவரது கதாபாத்திரம் பெரிதும் யாரையும் கவரவில்லை முக்கியமாக சமந்தாவின் ஒரு பாடல், படம் முழுக்க வரும் ராஷ்மிகாவை ஓரம்கட்டிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்த பாடம் குறித்து சமந்தா கூறிய ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. 

அந்த பாடலில் ஆடும் போது என் உடலே நடுங்கியது. இப்படி கவர்ச்சியாக ஆடுவது என் உடலுக்கு செட் ஆகாது என நினைப்பேன், அதனால் முதல் ஷாட் ஆடும் போது பயத்தில் நடுக்கத்தில் இருந்தேன். அதனால் இனி இது போன்ற பாடல்களில் ஆடுவதில்லை என முடிவெடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

Related Posts