பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1ம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் கார் சேதம் | Thedipaar News

Related Posts