என்னது ஐஸ்கிரீமில் விந்து கலந்து விற்பனையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பாலாஜி என்ற ஐஸ்கிரீம் கடையில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு பலுடா ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் போது, கடைக்காரர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுவை அதில் கலந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. ஃபலூடாவில் ஐஸ்கிரீம் கடைக்காரர் சுயஇன்பம் செய்து பின்னர் தனது விந்தணுவை கலக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் குளிர்பான கடையை பார்வையிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை கெட்டுப்போனதால் தூக்கி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், சாலையோர உணவு வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவு தயாரிப்பதில் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Related Posts