திருமணத்திற்கு நோ சொன்ன கல்யாண பொண்ணு! மாப்பிள்ளை செய்த காரியம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தீபா. இவரை தன்னுடைய சொந்த தாய் மாமா மால்தேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க இவருடைய குடும்பத்தார் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் தீபா படிக்க வேண்டும் இதனால் கல்யாணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரை மால்தேஷ்க்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர் . தீபாவிற்கு தனது தாய்மாமனை சுத்தமாக பிடிக்காது என்று கூறப்படுகிறது .குடிப்பழக்கம் ஊரில் தகராறு என்று சுற்று திரியும் இவரை நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். 

தீபா தன்னுடைய தாய் மாமாவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தீபாவை சமாதானம் செய்வதாக அவருடைய தாய்மாமா மால்தேஷ் வீட்டிற்கு பின்புறம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதனால் தீபாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் பயந்து போன அவர் தீபாவின் கழுத்தில் துப்பட்டாவை கட்டி அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டுவது போல தொங்கவிட்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts