மாணவரின் அதீத ஆர்வம், உயிரையே பறித்துவிட்டதே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் ஜிகேஎம் காலனி பகுதியில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது, ஆதித்ய பிரணவ் என்ற மாணவர் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது, வேதியல் பொருட்களை கொண்டு சோதனை செய்வதில் குறித்த மாணவருக்கு அதீத ஆர்வம் இருந்துள்ளது. புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆதித்ய பிரணவுக்கு இருந்த ஆர்வமே அவரின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது. வேதியல் பொருட்கள் வெடித்தத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பாஸ்பரஸ் வெடித்ததன் காரணமாக அக்கம்பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் மீட்பு | Thedipaar News

Related Posts