சீரியல் நடிகைக்கு இவ்வளவு தைரியமா? அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓப்பனாக பேசிவிட்டாரே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆர்த்திகா. இப்போதெல்லாம் சினிமாவில் நடக்கும் தவறான சீண்டல்கள் பற்றி பலரும் ஓப்பனாக பேசிவருகிறார்கள். இவர் சமீபத்தில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இப்போது தெரியாமல் வந்து கேட்டுடீங்க, இனி கேட்காதீங்க என்று வெளிப்படையாக கூறிவிடுவேன். ஏன் என்றால் சினிமா எனக்கு பெரிய விஷயம் இல்லை. இந்த வேலை இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒரு வேலைக்கு போய் பிழைச்சுப்பேன். மானத்தை விற்று பிழைக்கவேண்டியது இல்லை. சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் இந்த தவறை செய்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள் என வெளிப்படையாக ஒரு பேட்டியை கொடுத்துள்ளார்

Related Posts