இரட்டை இலை ஒதுக்கீடு யாருக்கு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கான சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலையை பயன்படுத்த தடை இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

Related Posts