மூன்றாம் நபர் உள்ளே வந்ததால் டைவர்ஸ் ஆனது - பாலிவுட் பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் நவாஸுதீன் சித்திக்.பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகரான அவர் கடந்த வருடம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதற்கு காரணம் அவரை பிரிந்து சென்ற மனைவி தான். சினிமாவில் முக்கியமான இடத்தில் உள்ள ஒரு நடிகர் திடீரென விவாகரத்து கோறும்போது போது, அது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. விவாகரத்து வழக்கு ஒருபக்கம் பல வருடங்களாக நடந்துகொண்டிருக்க, தன்னிடம் பணம் பறிக்க பல்வேறு மோசமான விஷயங்கள் செய்கிறார் என மனைவி மீது நவாஸுதீன் சித்திக் புகார் கூறினார்.

இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நவாஸுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம். பிரச்சனைகளுக்கு காரணம் மூன்றாம் நபர் தலையீடு தான். இனி அது இருக்காது என ஆலியா பதிவிட்டு இருக்கிறார்.சமீபத்தில் தங்களது திருமண நாளை ஒன்றாக கொண்டாடிய போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காரணம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டார்கள். திடீரென ஒன்றாக சேர்ந்து வாழ உள்ளோம் என செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

கனடாவில் ராட்சத பாம்பு | வீட்டில் வளர்ப்பு | Thedipaar News

Related Posts