நயகராவில் சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூரண சூரிய கிரகணம் கனடாவின் நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் தெளிவாக தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நயகரா நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்காக சுமார் ஒரு மில்லியன் மக்கள் நயகரா நோக்கி வருகைத் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே பிராந்திய வலயத்தில் வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாத்துக் கொள்ளவும் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts