ரொறன்ரோவில் மில்லியன் பெறுமதியான சொகுசு வாகனங்கள் திருட்டு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் திருடப்பட்ட 20 சொகுசு வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1.8 மில்லியன் டொலர் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 38 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு மற்றும் பீல் பிராந்திய காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது ,திருடப்பட்ட வாகனங்கள் டுபாய் மற்றும் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts