குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே உள்ள வண்டவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் - லதா தம்பதி. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

ஹரிதாஸ் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரிதாஸ், வழக்கம்போல் மனைவியை பார்த்து தகாத வார்த்தையை பேசி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மனைவி லதா, வெந்நீரை எடுத்து கணவன் மீது ஊற்றியுள்ளார். அப்போது, ஹரிதாஸின் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் வெந்நீர் பட்டதில் அவர் வலியால் துடித்துள்ளார். அலறிய சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வந்து உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த ஹரிதாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மகனை சினிமாவுக்கு அனுப்புகிறாரா ஜோதிகா? | Thedipaar News

Related Posts