குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - தேர்வில் முதல் மதிப்பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிர்மலா, ஆந்திர பிரதேசம் கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த பெண். வறுமை போன்ற காரணங்களினால் பாதிக்கப்பட்ட இப்அவரது குடும்பத்தில் உள்ள 3 பெண் குழந்தைகளை ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஆகவே, நிர்மலாவையும் திருமணம் செய்து வைக்கப் போவதாக கூறியுள்ளனர். ஆனால், நிர்மலாவோ படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.

இதனால், அக்கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்ளூர் YSRCP சட்டமன்ற உறுப்பினர் ஒய் சாய்பிரசாத் ரெட்டியை அணுகி தனது நிலை குறித்து தெரிவித்த அவர், தான் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்எல்ஏ அம்மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவிக்கவே நிர்மலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 பின்னர், நிர்மலாவை ஆஸ்பரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் சேர்த்து மேற்படிப்பினை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகின அதில், 440 க்கு 421 மதிப்பெண் பெற்று முதல் பெண் பெற்று அசத்தியுள்ளார் நிர்மலா. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 10 வகுப்பு பொதுத்தேர்விலும் 537 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts