விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்ற திஹாரிய தம்பதிகள் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கண்டி – தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதி, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் ஆயிஷா – வயது 22, ஆண் தில்ஷாத் – வயது 28 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை – அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஹாரிய, ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியினரே, இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்குச் சென்ற போது, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள “மோல் கல்” என்ற இடத்திற்கு இவர்கள் இருவரும் (15) திங்கட்கிழமை நண்பகல் நீராடச் சென்றுள்ளனர். (P)

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts