வெயிலை தணிக்க தற்காலிக மழை வரப்போகிறாதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி குமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Related Posts