சினிமாவே வேண்டாம் வெளிநாட்டிற்கு ஓடிய அப்பாஸ்! காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். சாக்லேட் பாய் என செல்லமாக திரைவட்டத்தில் அளவுக்கு வளர்ந்தார். அரவிந்த்சாமி, மாதவன் என 90களில் வலம் வந்த ஸ்மார்ட் ஹீரோக்கள் லிஸ்டில் இவரும் இணைந்தார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். திரைக்கு வந்த உடனே கிடுகிடுவென வளர்ந்தவர் திடீரென சினிமாவிற்கு குட்பாய் சொல்லிவிட்டு காணாமல் போனார். எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார் அப்பாஸ்.இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார். இதில் அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் வேலை செய்தேன் என கூறியுள்ளார். திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இவர் செய்த தொழில்கள் எல்லாமே வெளிநாட்டில் என்பதால், இவர் கஷ்டப்பட்டது இவரது ரசிகர்களுக்கு தெரியாமல் போனது. சினிமாவை விட்டு போன அப்பாஸ் எங்கேயோ வசதியாக வாழ்கிறார் என்றவாறு தான் சினிமா வட்டாரம் நினைத்து கொண்டிருந்தது. ஆனால் இவர் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருந்து விட்டு, திடீரென வெளிநாட்டில் கழிவறை சுத்தம் செய்யும் அளவிற்கு வாழ்வில் நலிந்து போன செய்தி தமிழ் சினிமாவையே உலுக்கி உள்ளது. தான் எதனால் சினிமாவை விட்டு போனார்? என்ன பிரச்சனை காரணம்? என்பதை இவர் இறுதிவரை கூறவே இல்லை.

Related Posts