ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க சென்ற போது, டிடிக்கு ஏற்பட்ட துயரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக பெரிதும் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை. ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்றால் அது டிடிக்கு மட்டும் தான். என்னதான் தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கி நின்றாலும் கூட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். தனது சிறுவயது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் டிடி. பின் இருவருக்கும் இடையே ஒத்துப்போகாத காரணத்தினால் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 

இந்த நிலையில், விவாகரத்து குறித்து தொகுப்பாளினி டிடி மனம்திறந்த பேசிய சில விஷயங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக இவர் தன்னுடைய திருமண வாழ்வை பற்றி மனம்திறந்து பேசியுள்ள செய்தி என்பதால், அது இவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. டிடி கூறியது, என் வாழ்க்கையில் நான் விவாகரத்து ஆன ஒருவள் என்பதை மக்கள் ஒருபோது நினைவு வைத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் தான் அதை ஞாபகப்படுத்தி கொண்டு இருக்கிறேன். விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே போதும் என நினைத்து, அந்த முடிவை எடுத்தேன். விவாகரத்து மிக மிக கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் நான் அதிலிருந்து மீண்டுவரவேண்டும் என தொடர்ந்து பிசியாக வேலை செய்து கொண்டிருந்தேன். 

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுடன் பேட்டிக்கு தயாராக கொண்டிருந்த போதுதான், எனக்கு விவாகரத்து உறுதியானது என தெரியவந்தது. விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருக்கும் நபரை விட, எனக்கு தான் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் நான் மீடியா வெளிச்சத்தில் இருக்கிறேன். ஆகையால் அதன் விளைவுகளை நான் எதிர்கொள்ள போகிறேன் என்று எனக்குள் சொல்லி முடித்துவிட்டு ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க சென்றேன் என டிடி பேசினாராம்.

Related Posts