நாட்டை உலுக்கிய விபத்து – இருவர் அதிரடி கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தியத்தலாவ கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (22) கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Foxhill supercross மோட்டார் பந்தயத்தில் பந்தய இலக்கம் 5 இல் கலந்து கொண்ட மாத்தறை மெதபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரும்,

பந்தய இலக்கம் 196 இல் போட்டியிட்ட பேராதனை மகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விபத்தில் காயமடைந்த நிலையில் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று (21) இந்த போட்டி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்தயத்தின் போது ஒரு கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, இதையடுத்து அதை பார்க்கச் சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (P)


Related Posts