நெடுந்தீவு மதுபான நிலையத்தை திறக்க எதிர்ப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில், மதுபான விற்பனை நிலையம் அவசியமற்றது என்பதுடன், எதிர்கால சந்ததியினரை பாதிப்புக்கு உள்ளாக்கும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது, நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சீரியலில் சின்ன ரோல் நிஜத்தில் இவ்வளவு பெரிய ஆளா? | Thedipaar News

Related Posts