முதல் படத்திலே கோவப்பட்ட நயன்தாரா! புலம்பி தள்ளிய இயக்குனர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து விட்டார். அவருக்கு அறிமுகம் தேவையா? ஒரு காலத்தில் தமிழ்நாட்டிற்குள் முதல் படத்திற்காக வரும்போது, அரசு பேருந்தில் வந்து இறங்கியவர் இன்று தனி விமானம் வைத்து பறக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். ரூ 10 கோடிகள் வரை ஒரு படத்திற்காக அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்துக்கு படம் சம்பளம் உயர்த்தி வந்த நயன்தாராவிற்கு இப்போது பாலிவுட்டில் சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா சொந்தமாக நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார். நயன்தாரா தமிழில் முதன் முறையாக அறிமுகமான படம் ஐயா, இப்படத்தில் 12வது படிக்கும் மாணவியாக இவர் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாரா செம கோபமாக இருப்பாராம், என்ன இந்த பொண்ணு இப்பதான் நடிக்க வருது, இப்பவே இவ்ளோ கோபமாக இருக்கிறார் என இயக்குனர் ஹரிக்கு தோன்றுமாம். முதல் படத்திலேயே காஸ்டியூம் விஷயத்துல் என்னிடம் கோபமாக முறையிடுவார், ஆனால், இந்த கோபம் எல்லாம் வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதாலேயே தான் என பேசியுள்ளார்.

Related Posts