விஜய் போலவே சைக்கிளில் வந்து அசிங்கப்பட்ட விஷால்! ஏன் இந்த பயணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் இருக்கும் படங்களில் நடித்துவிட்டு சினிமாவிற்கு குட்பாய் சொல்லிவிட்டு, அரசியல் கட்சி தொடங்கி, எதிர்கால ஆட்சிக்கு ஆயத்தமாகிவிட்டார். அதனை தொடர்ந்து விரைவில் தானும் அரசியலில் நுழைவேன் என அறிவித்தார் விஷால். ஏதோ ஏட்டிக்கு போட்டி செய்வது போலவே இருந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஷால் சைக்கிளில் வாக்களிக்க வந்தார். முந்தைய தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், அதை விஷால் அப்படியே காபி அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். என்னிடம் வேறு வண்டி இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்றதை விற்றுவிட்டேன்.இப்போது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பெண்க்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.என்னிடம் காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் என கூறி இருக்கிறார் விஷால். 

இவர் கூறும் இந்த விளக்கத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, கோடியில் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் வம்சமே இப்படி சொன்னால் யார் தான் எற்றுக்கொள்வார்கள்? வேறு வாகனம் இல்லாமல் சைக்கிளை மட்டும் அன்றாடம் பிழைக்கும் ஏழை மக்கள் இதை கேட்டால் எவ்வளவு கடுப்பாவார்கள்? ஆனால் ஒரு விஷயம் நிதர்சனம் ஏழை, நடுத்தர மக்கள் தான் சைக்கிள்களை கவுரவ குறைச்சலாக பார்க்கிறார்கள், பணக்காரன் எதையும் எளிமையாகவே அணுகுகிறான். ஆக மொத்தம் உண்மையில் என்ன காரணத்திற்காக விஷால் சைக்கிளில் வந்தார் என தெரியவில்லை, அவர் கொடுக்கும் விளக்கமும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பது மக்களின் கருத்து.

Related Posts