Fox Hill கார் பந்தய சாரதிகள் பிணையில் விடுவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தியதலாவை Fox Hill  கார் பந்தய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கார் பந்தய வீரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கார் பந்தய விபத்தில் காயமடைந்த இரண்டு வீரர்களும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே விளக்கமறியல் உத்தரவை நீதவான் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், பண்டாரவளை நீதவான் இன்று கார் பந்தய வீரர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

தியதலாவை கார் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், 20ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். (P)


Related Posts