தமன்னாவுக்கு வந்த தலைவலி! உச்ச நடிகைக்கு இந்த அவமானம் தேவையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என இவர் பல மொழிகளில் நடித்து பிரபலமாகிவிட்டார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் ஷர்மாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. தற்சமயம் இவர் குறித்த செய்தி ஒன்று சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2023 -ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை Fairplay என்ற செயலியில் மூலமாக சட்டவிரோதமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. 

இதனால் viacom நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் Fairplay செயலியின் விளம்பரத்தில் நடித்த தமன்னாவிற்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். அதன்படி தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர்கள் இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வதும் பின்பு அந்த சர்ச்சைகளில் இருந்து வெளிவந்த பின்னர் தனக்கும் அந்த பிரச்சனைக்கும் தொடர்பு இல்லாதது போல இருப்பதும் சகஜம் தானே?

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்