நாகசைதன்யாவின் காதல் உறுதி செய்யப்பட்டுவிட்டதா? பெண் யார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவு தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியது. சைதன்யா சார்பில் தனக்கு கொடுப்பட்ட எந்த ஜீவானம்சத்தையும் சமந்தா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். சமந்தா எங்கேயோ சென்றுவிட்டார், தெலுங்கு, மலையாளம், தமிழ், பாலிவுட் என படுபிஸியாக உள்ளார். நாக சைதன்யா அதன் பின் பிரபல நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது. சோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷாவின் தோழியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் சோபிதா காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதே போல நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாகவும் மீண்டும் இணையத்தில் கிசுகிசு வர தொடங்கி இருக்கிறது.

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்