பிரதமர் மோடியின் இலக்கு! ஆரவார பிரச்சாரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை பல்வேறு வகைகளில் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் இந்தியா முழுக்க தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் , மின்சார கட்டணத்தை குறைப்பது, சோலார் பேனல்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்கால இலக்குகளை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைப்பதே தனது இலக்கு என்றும், அதன் மூலம் வீட்டிற்கு தேவையான மின் கட்டணத்தை முழுவதும் குறைத்து ஜீரோவாக மாற்ற வேண்டும் என்றும் எரிசக்தி துறையில் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் பிரதமர் மோடி நேர்காணலில் குறிப்பிட்டார்.

Related Posts