ஸ்காபரோ நெடுஞ்சாலை 401ல் மோட்டார் சைக்கிள் விபத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்காபரோவில் நெடுஞ்சாலை 401ல் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை 7 மணியளவில் போர்ட் யூனியன் சாலைக்கு அருகே நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய பாதையில் மோதல் ஏற்பட்டது.  மோட்டார் சைக்கிள் பிக்கப் டிரக் மீது மோதியதாக பொலிஸார் கூறினர். 

ரொறன்ரோவை சேர்ந்த 27 வயதான சாரதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மோதல் பற்றி மேலும் தகவல் தெரிந்தவர்கள் OPPயை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டன ர்.

Related Posts