மிரளும் சினிமா வட்டாரம், ஐந்து நிமிசத்துக்கே ஐந்து கோடி வாங்கிய நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. என்னதான் வாழ்வில் சோதனை வந்தாலும் கூட மனம் தளராமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். மனதளவிலும் சரி, உடல் அளவிலும் சரி இவர் பயங்கரமாக அடிவாங்கி விட்டார். இருப்பினும் கூட பலருக்கு முன் உதாரணமாக வாழ்வில் சாதித்து கொண்டே இருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் கதை அம்சத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். விரைவில் சமந்தா நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது. 

இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால். புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு 5 நிமிடம் நடனம் ஆடிய சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. அப்படியானால் தென்னிந்திய சினிமாவில் மிகவும் காஸ்லியான ஹீரோயின் என்றால் அது சமந்தா தான். இந்த வகையில் நயன்தாரா எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்கிறார்கள் இணையதளவாசிகள்.

Related Posts