நிலவின் இருண்ட பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியது சீனா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நிலவின் இருண்ட பகுதிக்கு அதாவது நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனா முதல் முறையாக நிலவின் தென் துருவத்திற்கு சாங் இ-6 என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.

சந்திரனின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த திட்டம், நிலவு ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீனா இதற்கு முன்பு வெற்றிகரமாக நிலவுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. அதில் ரோவர் தரையிறக்கமும் அடங்கும். செவ்வாய் கிரகத்துக்கும் ரோவர் அனுப்பியுள்ளது. 2030-க்குள் மனிதர்களை சந்திரனில் தரையிறக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

Related Posts