இனி மின்வெட்டிற்கு வாய்பே இல்ல!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21,000 மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts