பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - 100 பேர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

எனினும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts