யாழில் ரோல்ஸில் துருப்பிடித்த கம்பி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணத்தில் உள்ள கடை ஒன்றில் நபர் ஒருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த (4 inch) கம்பித் துண்டொன்று காணப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணம் - மருதனார் மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் வாங்கிய ரோல்ஸிலேயே குறித்த துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .
 
இதேவேளை, கடந்த 21ஆம் திகதி மருதனார் மடத்தில் உள்ள கடையொன்றில் இரவு உணவிற்காக வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  


Related Posts