ரொறன்ரோ வாகன திருட்டு சம்பத்தில் தேடப்படும் தமிழர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வாகனத் திருட்டு விசாரணையில் பீல் பிராந்திய காவல்துறையினர் 16 பேரை கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய காவல்துறையினர் தலைவர் நிசான் துரையப்பா இது திட்டமிடப்பட்ட குற்ற சம்பவம் என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் தவிர, இந்த வாகன திருட்டு விசாரணை தொடர்பாக மேலும் 10 நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.

ரொறன்ரோவை சேர்ந்த சருகன் ராஜா மற்றும் அபினாஷ் சண்முகநாதன் ஆகிய தமிழர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் 322 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

பீல் பிராந்திய காவல்துறையின் மிக முக்கியமான வாகனத் திருட்டு விசாரணை இதுவாகும் என நிசான் துரையப்பா செய்தியாளர்களிடம் கூறினார். 

இந்த விசாரணையில் 369 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Posts