மக்களின் ஏச்சுக்கு ஆளான நடிகர்! இதெல்லாம் தேவையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர்கள் யோசிக்காமல் மேடையில் பேசும் விஷயங்கள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அப்படி தற்போது நடிகர் எம்எஸ் பாஸ்கர் நெட்டிசன்களின் ட்ரோல்களில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் லாந்தர் என்ற பட விழாவில் பேசிய அவர் 120 ருபாய் வெச்சு கோபுரம் கட்ட போறதில்ல. படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்க. நல்லா இல்லை என்றால் யாரிடமும் சொல்லாதீங்க. ஒரு படம் எடுக்க எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா? என கூறி இருக்கிறார்.இந்நிலையில் தற்போது நெட்டிசன்கள் MS பாஸ்கரை ட்ரோல் செய்து வருகின்றனர். 120 ருபாய் சம்பாதிப்பது எவ்ளோ கஷ்டம் என உங்களுக்கு தெரியுமா என அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.120 ரூபாயை சும்மா யாரிடம் வாங்கி விடுங்களே பார்க்கலாம்? என பலரும் இவர் மீது கோவத்தை கொட்டுகின்றனர். பேசும் முன் யோசித்து பேச வேண்டும் என்பதை பல நடிகர்கள் மறந்து விடுகிறார்கள். இதனால் மக்களின் ஏச்சுக்கு ஆளாகி விடுகிறார்கள். இதன் காரணமாகவே பலர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து விடுகிறார்கள்.

Related Posts